search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீஞ்சூர் கொள்ளை"

    மீஞ்சூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர், பாபு நகரைச் சேர்ந்தவர் சேகர். புரசைவாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு திருவள்ளூர் அருகே மணவாளநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று மாலை திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி, 2 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    ×